Wednesday, January 26, 2011 | By: INDIA 2121

HAPPY REPUBLIC DAY - 2011

31 STATES


1618 LANGUAGES


6400 CASTS


6 ETHNIC GROUPS


29 FESTIVALS


ONE COUNTRY, PROUD TO BE AN INDIAN.

HAPPY REPUBLIC DAY. JAIHIND.






Monday, September 20, 2010 | By: INDIA 2121

பூமியை தாக்குமா? சூரிய சூறாவளி

  உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.
‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.
“2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்” என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

குண்டூஸ்.. டோன்ட் ஒர்ரி ஹாலிவுட் நடிகைகள் ஆறுதல்

 ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஹட்சன் (29). நடிகைகள், பாடகிகள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உடைத்தெறிந்தவர். 2006&ல் ட்ரீம்கேர்ள்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். இதெல்லாம்விட.. அதிபர் ஒபாமாவின் நண்பர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ஒபாமா கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியில் பாடி அசத்தியவர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உடம்பு இளைத்தால் நல்லதுதான். நானும் முயற்சி செய்கிறேன். ஆனால், இளைக்காவிட்டால் அலட்டிக் கொள்வதில்லை. நான் டயட்டில் இருக்க ஆரம்பித்த பிறகு, ஆடை சைஸ் 5 முறை அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்றுகூட பார்ப்பதில்லை.
‘குண்டாக இருக்கிறீர்களே’ என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக நாம் கவலைப்பட்டு மகிழ்ச்சியை தொலைக்க வேண்டுமா? நமக்கு நாம் ஓகேவா? அதுபோதும்.
இவ்வாறு ஜெனிபர் கூறினார்.
இதே கருத்தை அமெரிக்க மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்டாஷியனும் (29) கூறியுள்ளார். ‘சூப்பர் ஸ்டிரக்சர்’ என்று உலகம் முழுவதும் புகழப்படுபவர். தன்னிடம் பிடிக்காத ஏரியா தொடைப்பகுதி என்கிறார் இவர். “எவ்வளவோ பயிற்சி செய்கிறேன்.. ஓடுகிறேன். தொடை அளவு குறையவில்லை. என் தொடைகள் இன்னும் சிறிய சைஸில் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஆயிரம்தான் இருந்தாலும் என் தொடையாச்சே. வெறுக்க முடியுமா? விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்பவேண்டியதுதான்” என்கிறார்.
Tuesday, September 7, 2010 | By: INDIA 2121

3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு


 14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.
 சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.  இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.
 அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது. இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.
 இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.
 நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.
 அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
 அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.
 2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.
 2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.
 2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.
 இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
Friday, September 3, 2010 | By: INDIA 2121

பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம்

 மியூச்சுவல் பண்ட்களில் இருப்பதுபோல, இனி பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இதை முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அறிமுகம் செய்துள் ளது. மியூச்சுவல் பண்ட்களில் மொத்த முதலீடு, மாத தவணை முதலீடு என இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது முதலீட்டில் பங்குச் சந்தையின் சரிவின் போது நஷ்டம் அதிகம். மாதாந்திர முதலீட்டில் (எஸ்ஐபி) பங்குச் சந்தை சரிவின்போது அதிக யூனிட்கள் கிடைப்பதால், நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
இதனால், 2வது முறைக்கு நடுத்தர, சிறு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நேரடி முதலீட்டில் லாபம் அதிகம் என்ற போதிலும், திடீர் சரிவுகளால் நஷ்டமும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், சிறு, நடுத்தர முதலீட்டாளர்களின் முதலீடு குறைவாகவே உள்ளது.
பங்குச் சந்தை மீது எல்லா பிரிவினருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய பங்கு வர்த்தக ஆணையமான ‘செபி’ எடுத்து வருகிறது. இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் போலவே பங்கு சந்தையிலும் மாதாந்திர தவணையில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அளிக்கும் இந்த வசதியில், 2 வழிகள் உள்ளன.
மாதத்துக்கு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்வது முதல் வழி. அதன் குறைந்தபட்ச தொகை ரூ.750. 2வது வழியாக, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்கலாம். மாதாந்திர முதலீட்டு திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள். பிறகு விரும்பினால் அதை நீட்டிக்கலாம் அல்லது பணத்தை திரும்பப் பெறவோ, பங்குச் சந்தையில் விட்டு வைக்கவோ செய்யலாம்.

அம்மா என்றால் அன்பு

 அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அப்பா, அம்மாவின் போட்டோக்களும் காட்டப்பட்டன. அவற்றை பார்க்கும்போது மூளையில் அடையும் மாற்றம் எம்.ஆர்.ஐ. உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. அப்பா போட்டோ பார்ப்பதைவிட அம்மா போட்டோவை பார்க்கும்போது மூளையின் உணர்தல் மற்றும் உணர்ச்சி அதிகமானது. அதாவது, அம்மாவை பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது பல்பின் பிரகாசம்போல் மூளை பளிச்சென சுறுசுறுப்பாகிறது.
பிறந்த பிறகு முதல்முறை அழுவது, முதல் முறை பால் குடிப்பது, முதல் முறை சிரிப்பது, கத்துவது, நடப்பது, பேசுவது என எல்லாமே குழந்தைக்கு புதிய, த்ரில்லான அனுபவம்தான். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருந்த அம்மாவின் நினைவும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவள் நம்மை அரவணைத்துக் கொண்டதும் மூளையில் ஆழமாக பதிவாகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பதிவுகள் மறைவதில்லை. அதனால்தான், எத்தனை வயதானாலும் அம்மா என்றதும் மலர்ச்சி அடைகிறோம்.
கைக்குழந்தையை வளர்க்கும் காலக்கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். டென்ஷனாக, கவலையாக இருந்தால் அது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

செல்போனிலேயே எக்ஸாம் எழுதலாம்

 நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் வேளையில் செல்போனில் தேர்வு எழுதும் முறையை பெங்களுரைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் கொண்டு வந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் பெற்றோரை அழைத்தும் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் பெங்களுரைச் சேர்ந்த சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேடு என்ற ஆர்ட்ஸ் கல்லூரியில் செல்போன் மூலம் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தேர்வு எழுதுவது பல வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ளது. தற்போது கம்ப்யூட்டரில் உள்ள தகவல் தொடர்பு வசதிகள் கையடக்க செல்போனிலும் வந்துவிட்டதால் ஆன்லைனில் செய்யக்கூடிய அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடியும்.
சேஷாத்ரிபுரம் கல்லூரியில் முதல் கட்டமாக பிபிஎம் மற்றும் பிசிஏ படிப்புகளில் இந்த செல்போன் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் பேப்பர்களுக்கு பதிலாக ஒரே மாதிரியான செல்போன் தரப்படும். இதில் கேம்ஸ் மற்றும் மெசேஜ் வசதி இருக்காது. இந்த செல்போன்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். மாணவரின் பெயரை செல்போனில் பதிவு செய்தவுடன் சர்வருடன் இணைப்பு கிடைக்கும். கேள்வித்தாள் செல்போன் திரையில் தோன்றும். அப்ஜக்டிவ் முறையில் இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை ‘டிக்’ செய்ய வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தவுடன் தேர்வை முடித்துக் கொள்கிறோம் என்பதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக அவரது விடைத்தாள் கல்லூரி சர்வரில் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் தரப்படும். இந்த முறையில் பேப்பர் செலவு மிச்சம். ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்த வேண்டிய வேலை மிச்சம். புதிய முறையில் தேர்வு என்பதால் மாணவர்களும் தேர்வை கண்டு பயப்படாமல் உற்சாகமாக தேர்வை எழுதுவார்கள்.
இது குறித்து கல்லூரி முதல்வர் எம்.பிரகாஷ் கூறுகையில், “தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கினோம். மாணவர்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இதில் காப்பி அடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார். விடைத்தாள் திருத்தும் வேலை இல்லாததால் ஆசிரியர்களும் இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் வருகைப்பதிவுக்கும் இந்த செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் செல்போனில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் வருகை பதிவாகிவிடும். கல்லூரிக்கு மாணவர் வரத் தவறினால் உடனடியாக கல்லூரியின் சர்வரிலிருந்து மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் சென்றுவிடும். இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு மட்டம் போட முடியாது. அட்டன்டெண்ஸ் எடுக்க வேண்டிய வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை.
Related Posts with Thumbnails