Friday, September 3, 2010 | By: INDIA 2121

பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம்

 மியூச்சுவல் பண்ட்களில் இருப்பதுபோல, இனி பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இதை முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அறிமுகம் செய்துள் ளது. மியூச்சுவல் பண்ட்களில் மொத்த முதலீடு, மாத தவணை முதலீடு என இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது முதலீட்டில் பங்குச் சந்தையின் சரிவின் போது நஷ்டம் அதிகம். மாதாந்திர முதலீட்டில் (எஸ்ஐபி) பங்குச் சந்தை சரிவின்போது அதிக யூனிட்கள் கிடைப்பதால், நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
இதனால், 2வது முறைக்கு நடுத்தர, சிறு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நேரடி முதலீட்டில் லாபம் அதிகம் என்ற போதிலும், திடீர் சரிவுகளால் நஷ்டமும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், சிறு, நடுத்தர முதலீட்டாளர்களின் முதலீடு குறைவாகவே உள்ளது.
பங்குச் சந்தை மீது எல்லா பிரிவினருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய பங்கு வர்த்தக ஆணையமான ‘செபி’ எடுத்து வருகிறது. இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் போலவே பங்கு சந்தையிலும் மாதாந்திர தவணையில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அளிக்கும் இந்த வசதியில், 2 வழிகள் உள்ளன.
மாதத்துக்கு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்வது முதல் வழி. அதன் குறைந்தபட்ச தொகை ரூ.750. 2வது வழியாக, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்கலாம். மாதாந்திர முதலீட்டு திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள். பிறகு விரும்பினால் அதை நீட்டிக்கலாம் அல்லது பணத்தை திரும்பப் பெறவோ, பங்குச் சந்தையில் விட்டு வைக்கவோ செய்யலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails