நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்துவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பது ஆச்சரியம்.
ஒரு எம்.பி.யின் சம்பளம் ரூ.16,000. ஒரு பியூனின் சம்பளத்தைவிட இது குறைவு என்று லாலு பிரசாத் குமுறுகிறார். தப்பான வழியில் நிறைய சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதால் மற்றவர்களுக்கும் நல்ல சம்பளம் மறுப்பது நியாயமல்ல என்கிறார். இந்த கோரிக்கை புதிதல்ல. அதை ஆராய்ந்த குழு, சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த சிபாரிசு செய்தது. எண்பதாயிரம். அது அமைச்சரவை செயலாளர் வாங்கும் சம்பளம். அதைவிட ஒரு ரூபாய் மேலே போட்டுக் கொடுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்டு, அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
மாவட்டத்தை ஆட்சி செய்யும் கலெக்டர்களே பிரமாண்டமான பங்களாவில் வசித்தாலும் குடும்ப செலவுகளை சமாளிக்க திணறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எந்த அரசியல்வாதியும் குடும்ப செலவுக்கு திண்டாடுவதாக சரித்திரமும் இல்லை,பூகோளமும் இல்லை . ஆனால் விலைவாசி யாரையும் விட்டு வைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தனி. சம்பளத்தை அப்படியே கட்சிக்கு கொடுத்து விட வேண்டும். மாத செலவுகளுக்கு கட்சி ஒரு சிறு தொகை கொடுக்கும். அதை வைத்து சமாளித்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இது தெரியும். அதனால் அதிகமாக தொந்தரவு கொடுப்பதில்லை. மற்ற கட்சியினர் அவ்வளவு அதிர்ஷ்டம் செய்யவில்லை. தினம் நூறு பேர் வருவார்கள். அதில் பலருக்கு சாப்பாடு போட்டு, ஊர் திரும்ப பஸ் கட்டணமும் கொடுக்க வேண்டியிருக்கும். கட்சிக்காரர், தெரிந்தவர், பத்திரிகையாளர் என்று தினமும் ஒரு வீட்டில் ஒரு நல்லது கெட்டது நடக்கும். மொய் எழுத வேண்டும்.
மக்கள் பிரதிநிதி என்றால் இப்படி பல வகையிலும் செலவுகள் இருக்கும். அதற்கு பணம் இல்லையென்றால் என்ன ஆகும்? மக்கள் சந்திப்பை தவிர்க்கலாம்; அல்லது தவறான வழிகளை நாடலாம். இது தெரிந்து சில மாநிலங்கள் எம்.எல்.ஏ சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளன.மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் வாழ்ந்த நாடு.எந்த அரசியல்வாதியும்
அரசின் சம்பளத்தை மட்டுமே நம்பி இங்கு வாழவில்லை.பதவி வருமுன் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும்,பதவிக்கு வந்த பின்பு பல கார்கள்,பல பங்களாக்கள்
பலதரப்பட்ட தொழில்கள்,கான்ராட் என எல்லாவித செல்வ செலிப்போடுதான் வாழ்கிறார்கள்.ஏன் வட்டம்,மாவட்டம் கூட அன்றாட செலவுக்கு திண்டாடவில்லை.
சம்பளத்தை அதிக படுத்த சொல்லும் லல்லு பற்றி நான் சொல்ல வேண்டாம்.உலகுக்கே
தெரியும்.இந்தியாவில் இருக்கும் அரசியவாதிகளில் யார் செலவுக்கு திண்டாடுகிறார்கள்.
அரசு அது பற்றி ஒரு சர்வே எடுக்கட்டும்,எந்த அரசியவாதி கஷ்டபடுகிரானோ அவர்களுக்கு மட்டும் சம்பளம் ஏற்றலாம். மற்றபடி தேவையில்லாமல் மக்களின் வரிபணத்தை வீணடிக்க வேண்டாம்.அந்த பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி,குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரலாமே? இந்தியாவில்
பீகார்,ஒரிசா போன்ற மாநிலங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத கிராமங்கள் ஏராளம்.இது போன்ற குறைபாடுகளால் தான் இந்த மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளது.அரசு திட்டங்கள் தீட்டும் போது தொலை நோக்கு
பார்வையோடு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களுக்கு இது போன்ற நிதிகளை
பயன்படுத்தலாமே.
0 comments:
Post a Comment