வங்கி வாடிக்கையாளர்களிடம் புதிய வழியில் செல்போன் மூலம் மோசடி நடைபெறுவதாக மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர். இது மற்ற நகரங்களுக்கும் பரவுவதால் சென்னை உட்பட மாநகர மக்களை வங்கிகள் உஷார்படுத்தியுள்ளன.
வங்கிகள், போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திடீரென யாருக்காவது மோசடி பேர்வழியிடம் இருந்து செல்போனில் அழைப்பு வரும். வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது (பொதுவாக,20,000க்குமேல்) என்று கூறுவார் பலே கில்லாடி. கிரடிட் கார்டு மோசடி நடந்திருக்கலாம் என்று பதறுவார் வாடிக்கையாளர். இணைப்பு துண்டிக்கப்படும். மேற்கொண்டு விவரம் அறிய அதே செல்போன் எண்ணுக்கு வாடிக்கையாளர் தொடர்பு கொள்வார். ‘உங்கள் கணக்கில் மேலும் திருடு போகாமல் இருக்க தற்காலிகமாக முடக்குகிறோம். அதற்கு உங்கள் ஐடி, பாஸ்வேர்டு சொல்லுங்கள்’ என்பார் மோசடி பேர்வழி. வங்கி பிரதிநிதி என்று நம்பி ஒப்பிப்பார் வாடிக்கையாளர். அடுத்த சில நிமிடங்களில் பறிபோகும்.
இப்படி வங்கி பிரதிநிதி போல பேசும் ஆண் அல்லது பெண் மோசடி பேர்வழி, நுனி நாக்கு ஆங்கிலத்திலும் அவரவர் மொழியிலும் சந்தேகம் வராதபடி பேசுவார். கிரடிட் கார்டு வாடிக்கையாளர்தான் அவர்களது குறி. வங்கி வாடிக்கையாளரில் பெரும்பாலோர் வங்கியின் லேண்ட்லைன் எண், மேலாளர், குறைதீர்ப்பு நடுவர் எண்களை தெரிந்து வைத்திருக்காதது மோசடி கும்பலுக்கு சாதகமாகிறது. இதுபற்றி ஏராளமான புகார்கள் வருவதாக வங்கி, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment