Friday, August 20, 2010 | By: INDIA 2121

கண்காணிப்பை மீறி போதை ஆசாமி விமான நிலையத்தில் ....

 பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை மீறி போதை ஆசாமி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் புகுந்து அங்கு நின்றிருந்த ஒரு கண்காணிப்பை மீறி போதை ஆசாமிஏற முயன்றிருக்கிறார். ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என வழக்கம்போல விசாரணை நடக்கிறது.
பொதுவாக, விமான நிலையத்தில் வழக்கமான நாட்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு இருக்கும். கார் பார்க்கிங், விமான நிலைய வராண்டா வரை உள்ளூர் போலீசார் இருப்பார்கள். அடுத்தகட்டமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CSF) இருப்பார்கள். மூன்றாவது கட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் (PCAS) இருப்பார்கள். இதுபோக, விமான நிறுவனங்களின் பாதுகாப்பு வீரர்களும் இருப்பார்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படையினர், சிறப்பு போலீசார் என கூடுதலாக மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.
சுதந்திர தினம் என்பதால் அன்றும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி எப்படி ஒருவர் விமானம் வரை சென்றார் என்பது பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன செய்கிறோம் என தெரியாமல் போதையில் ஒருவர் இவ்வளவு தூரம் செல்ல முடிந்தால், திட்டமிட்டு செயல்படுத்தும் தீவிரவாதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?
இப்படி நடப்பது முதல் முறையல்ல. ஓடுபாதையில் நாய் ஓடுவது, மர்ம நபர்கள் விமானம் வரை செல்வது என பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அத்துமீறும் மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்கள் பிடிபடும்போது அவர்களை போதை ஆசாமி என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி பிரச்னையை அமுக்கிவிடுகின்றனர்.
ஸ்டேட் போலீஸ், சென்ட்ரல் போலீஸ், சாதாரண உடையில் உளவு போலீஸ், திரும்பும் இடமெல்லாம் கண்காணிப்பு கேமரா என இத்தனை இருந்தும் அத்துமீறல்கள் நடப்பது பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
விமான நிலையத்தில் புல் வெட்டுபவர், கட்டுமான தொழிலாளர், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருடன் பாதுகாப்பு போலீசார் பழகுவது, அந்த பரிச்சயம் காரணமாக ஐ.டி. கார்டைக்கூட சோதனை செய்யாமல் உள்ளே அனுமதிப்பது போன்றவை தீவிரவாதிகள் விமான நிலையத்தின் உள்ளே நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அதற்குள் விழித்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails