Monday, August 23, 2010 | By: INDIA 2121

இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 82.5 கோடி

 இந்தியாவில் மாதத்துக்கு ஒருவரது வருமானம் 1,035க்குகீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை 82.5 கோடி என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த பிரிவினரை ஏழைகளாக அது பட்டியலிட்டுள்ளது.
இதுபற்றி ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை வருமாறு:
இந்தியாவில் நடுத்தர வருமான பிரிவினர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. எனினும், நடுத்தர பிரிவினரில் பெரும்பகுதியினரின் தனிநபர் மாத வருமானம் 1,035 முதல் 2,070
ஆக உள்ளது. குடும்பத்தில் ஒவ்வொருவரின் சராசரி மாத வருமானம் இதுவாக இருப்பவர்கள் எண்ணிக்கை 22.4 கோடி. இவர்களை கீழ்நிலை நடுத்தர மக்கள் (லோயர் மிடில் கிளாஸ்) எனலாம்.
அடுத்ததாக,2,070 முதல் 5,177 வரை மாத தனிநபர் வருமானம் கொண்டவர்கள் 4.5 கோடி பேர் உள்ளனர். இவர்கள் நடுத்தர மிடில் கிளாஸ் பிரிவினர். 
மாதத்துக்கு ஒருவர் 5,177 முதல் 10,354 வரை வருமானம் சம்பாதித்தால் அவர்கள் உயர் நடுத்தர வருமான பிரிவினராக (அப்பர் மிடில் கிளாஸ்) கருதப்படுகின்றனர். இவர்களது எண்ணிக்கை 50 லட்சம் மட்டுமே.அதற்கும் மேலாக மாதத்துக்கு 10,354 மேல் வருமானம் சம்பாதிப்பவர்கள் பணக்கார பிரிவில் உள்ளனர். அதாவது, ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்து, மொத்த மாத வருமானம் 41,416க்கு மேல் இருந்தால் அவர்கள் பணக்கார பிரிவினர். இதேபோல, ஏழைகள், நடுத்தர மக்களும் கணக்கிடப்பட்டுள்ளனர்.
எனினும், ஆசிய நாடுகளில் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails