Monday, August 23, 2010 | By: INDIA 2121

முகேஷை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆகிறார் அனில்

 நாட்டின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் நீண்ட காலமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, முதல் முறையாக 2வது இடத்துக்கு இறங்குகிறார். முதலிடத்தை வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் விரைவில் பிடிக்கிறார்.
உலோகங்கள், சுரங்கங்கள் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கிறார் வெளிநாடு வாழ் இந்தியரான அனில் அகர்வால். அவரது வேதாந்தா குழுமம் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை 44,200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வேதாந்தா குழும நிறுவனங்களில் அனில் அகர்வால் குடும்பத்தினரின் பங்குடன், கெய்ர்ன் இந்தியாவில் அவரது பங்குகளும் சேர்ந்தால் மொத்த மதிப்பு 1.67 லட்சம் கோடியாக உயர்கிறது.
இது ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 1.45 லட்சம் கோடியை விட அதிகம். எனவே, இதுவரை நாட்டின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ், விரைவில் 2வது இடத்துக்கு வருகிறார். அனில் அகர்வால் முதலிடம் பிடிக்கிறார். இது அனில் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 80,000 கோடியைவிட 2 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails