அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 11 கோடி பேருக்கு வேலை அளிக்கும். அது உலகிலேயே மிக அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் வேலைவாய்ப்பு பற்றி கோல்டுமேன் சாச் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, இந்தியாவில் 2020ம் ஆண்டுக்குள் மேலும் 11 கோடி பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். இங்கிலாந்து, தென்கொரியா நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் மத்திய அரசின் புள்ளிவிவரத்தின்படி இப்போதைய மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் 25 வயதுக்கு குறைந்தவர்கள். மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இளைய தலைமுறையினர் அதிகரிப்பு 2050ம் ஆண்டு வரை இந்தியாவில் தொடர்ந்து உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களில் 11 கோடி பேர் வேலை பெறவுள்ள நிலையில், அதே காலத்தில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடான சீனாவில் 1.5 கோடி பேருக்கு மட்டுமே புதிதாக வேலை கிடைக்கக்கூடும்.
இந்தியாவில் புதிதாக ஏற்படவுள்ள 11 கோடி வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறை முதலிடம் வகிக்கும். நிதி, கல்வித் துறையில் குவிய உள்ள அதிக முதலீடு காரணமாக திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் 21 கோடி பேர் வேலை பெறுவார்கள் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment