Wednesday, July 21, 2010 | By: INDIA 2121

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்வாரா?

 
 அரியலூரில்நடந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று 1956ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதை முன்னுதாரணமாக கொண்டு ஒவ்வொரு முறை ரயில் விபத்து நடக்கும்போதும் அத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. மேற்கு வங்கத்தில் 17.07.2010 இரவு 2 ரயில்கள் மோதி 62 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மேற்குவங்க சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்கள் இதை வலியுறுத்தி பேசியுள்ளனர். ரயில் பயணிகளின் பாதுகாப்பில் மம்தா அலட்சியப் போக்குடன் நடந்துகொள்கிறார். இதனால்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் நக்சலைட்கள் நடத்திய குண்டுவெடிப்பில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஐம்பது நாள் இடைவெளியில் மீண்டும் அங்கு பெரிய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை சுட்டிக்காட்டிதான் இடதுசாரி கட்சிகள் மம்தா ராஜினாமா கோரிக்கையை முன்வைக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நக்சலைட்கள் நடத்தியது மிகப்பெரிய சதி. எதிர்பாராதது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு ரயில்வே பாதைகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்போது நடந்த விபத்துக்கு காரணம் மனித தவறாக இருக்கலாம் என ஆரம்ப நிலை விசாரணை தெரிவிக்கிறது. எனினும், ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருக்கும்போது அதே பாதையில் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது எப்படி, ஸ்டேஷனில் வந்து நிற்க வேண்டிய ரயில் பிளாட்பாரத்தை நெருங்கும்போதும் மின்னல் வேகத்தில் வந்த காரணம் என்ன என்பதெல்லாம் புதிராக இருக்கிறது. இதில் நாசவேலை ஏதாவது இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. சதி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று மம்தாவும் கூறியிருக்கிறார். எனவே இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரம் அறியப்பட வேண்டும். இந்த நிலையில் அதுதான் முக்கியமானது. அதைவிட்டு மம்தா பானர்ஜி உடனே பதவி விலக வேண்டும் என இடதுசாரிகள் சொல்வது, மேற்குவங்க அரசியல் கணக்கை முன்வைத்துத்தான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

2 comments:

ரோஸ்விக் said...
This comment has been removed by the author.
ரோஸ்விக் said...

அவ்வளவு ரோசத்தோடையா இன்னும் நம்ம அரசியல் வியாதிகள் இருக்காய்ங்க?? போங்கண்ணே காமெடி பண்ணிக்கிட்டு... :-)))

Kindly remove word verification for comments.

Post a Comment

Related Posts with Thumbnails