இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் பாக்கி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகம். இது 2009 மார்ச் மாத நிலவரம். அதன் பிறகு மேலும் அதிகரித்திருக்கலாம்.
இதை ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2008 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2008&09 நிதி ஆண்டில் இந்தியாவின் வெளிநாட்டு கடன் ரூ.10.53 லட்சம் கோடியாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் ரூ.12.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 16.5 சதவீத அதிகரிப்பு.
இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு மொத்த கடன் தொகையில் நீண்ட கால கடன் தொகை ரூ.9.87 லட்சம் கோடி. குறுகிய கால கடன் தொகை ரூ.2.39 லட்சம் கோடி. 2008ம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் குறுகிய கால கடன் தொகை ரூ.42,770 கோடி அதிகரித்தது. நீண்ட கால கடன் ரூ.2.03 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
மொத்த வெளிநாட்டு கடனில் அரசின் பங்கு 2008ல் 24.4 சதவீதமாக இருந்தது. அது 2009 மார்ச் மாதத்தில் 25.7 சதவீதமாக உயர்ந்தது. மாறாக, அரசு சாராத கடன் தொகை 75.6 சதவீதத்தில் இருந்து 74.3 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் குறுகிய கால கடன் 41.2 சதவீதம். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்தும் வர்த்தக நோக்கில் வெளிநாடுகளிடம் இருந்தும் அதிக அளவில் கடன் பெறப்படுகிறது.
இதனால் ஆண்டு தோறும் நாட்டின் கடன் சுமை வேகமாக உயர்ந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 110 கோடி என்று வைத்துக் கொண்டால் நிலுவையில் உள்ள கடன்களால் ஒவ்வொரு குடிமகன் தலை மீதும் சராசரியாக ரூ.11,145 கடன் சுமை உள்ளது.
0 comments:
Post a Comment