அமெரிக்க டாலர், இங்கிலாந்து பவுண்டு, யூரோ டாலர் போல இந்திய ரூபாய்க்கு தனி குறியீட்டை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக ஒரு போட்டி வைத்து ரூ.2.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தி ‘ர’ எழுத்தை அடிப்படையாக வைத்து புதிய குறியீட்டை உருவாக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பல குறியீடுகளை உருவாக்கியிருந்தனர். இதில் ஐஐடி மாணவர் உதயகுமார் வடிவமைத்த குறியீடு உள்பட 5 குறியீடுகள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் உதயகுமார் வடிவமைத்த குறியீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசின் அனைத்து பயன்பாட்டிலும் இந்தக்குறியீடு நடைமுறைக்கு வர 6 மாதங்கள் ஆகும் , சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற 2 ஆண்டுகள் ஆகும்.
0 comments:
Post a Comment